ஆப்நகரம்

புகார் அளிக்கச் சென்ற பெண்ணை மசாஜ் செய்யச் சொன்ன போலீஸ் அதிகாரி!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணை போலீஸ் அதிகாரி ஒருவர் தனக்கு மசாஜ் செய்யச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 18 Jun 2016, 4:06 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணை போலீஸ் அதிகாரி ஒருவர் தனக்கு மசாஜ் செய்யச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil woman complainant made to massage cop at up police station
புகார் அளிக்கச் சென்ற பெண்ணை மசாஜ் செய்யச் சொன்ன போலீஸ் அதிகாரி!!


உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ளது ஹர்தோய் மாவட்டம். இங்குதான் இந்த சம்பவம் நடந்தது. தனக்கு மசாஜ் செய்யச் சொன்ன சப் இன்ஸ்பெக்டரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தற்போது பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புகார் கொடுக்கச் சென்ற பெண் கூறியதாக வெளியான செய்தியில், கோத்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது தனக்கு மசாஜ் செய்தால்தான் புகாரை ஏற்றுக் கொள்வேன் என்று பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், போலீஸ் நிலையத்திற்குள் சர்ட் இல்லாமல் அந்த போலீஸ் அதிகாரி அமர்ந்து இருப்பதும், அவருக்கு அந்தப் பெண் மசாஜ் செய்வது போன்ற புகைப்படம் வெளியாகி பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்தப் போலீஸ் அதிகாரியின் அருகில் அந்தப் பெண்ணின் கணவனும் அமர்ந்து கொண்டுள்ளார்.

தற்போது அந்த போலீஸ் அதிகாரியை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, முதல்வர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளனர்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை போலீஸ் அதிகாரிகள் மறுத்துள்ளனர். அந்தப் பெண் மூலிகையில் தயாரிக்கப்பட்ட ஆயிலை விற்று வருவதாகவும், அதை அவருக்கு எப்படி பயன்படுத்துவது என்று செய்து காட்டியதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி