ஆப்நகரம்

காரை வழிமறித்து 21 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்!

பஞ்சாபில் காரில் நண்பருடன் சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்து 10 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.

Samayam Tamil 12 Feb 2019, 12:39 pm
பஞ்சாபில் காரில் நண்பருடன் சென்றுகொண்டிருந்த பெண்ணை வழிமறித்து 10 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
Samayam Tamil images (2)


பஞ்சாப்பில் உள்ள லூதியானாவிலிருந்து 21 வயது பெண்ணும் அவரது நண்பரும் காரில் பயணம் செய்தனர். அவர்களது காரை மூன்று இருசக்கர வாகனம் பின்தொடர்ந்து வந்துள்ளது. ஜாகரன் என்ற இடத்திற்கு வந்ததும், இருசக்கரவாகனத்தில் வந்த 6 நபர்கள் காரை வழி மறித்து 21 வயது பெண்ணை வலுக்காட்டாயமாக பிடித்து இழுத்துள்ளனர். மேலும் யாருமில்லாத இடத்திற்கு அந்த பெண்ணை இழுத்துச்சென்றுள்ளனர். இந்த 6 பேரும் வேறு சிலரை அழைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் நண்பர் கொடுத்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி