ஆப்நகரம்

பீகாரில் பெண் இன்ஜினியர் உயிரோடு எரித்துக் கொலை!

பீகாரில் பெண் இன்ஜினியர் உயிரோடு எரித்துக் கொலை!

TOI Contributor 25 Oct 2016, 4:44 pm
பீகார் : முஸாஃபர்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். 35 வயது மதிக்கத்தக்க இந்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஞாயிறு அன்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பஜ்ரங் விஹார் காலனியில் உள்ள இவரது வீட்டில், நாற்காலியில் அப்பெண்ணின் கை, கால்களை கட்டி உயிருடன் தீ வைத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்துள்ளது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil woman engineer burnt alive in bihar
பீகாரில் பெண் இன்ஜினியர் உயிரோடு எரித்துக் கொலை!


வீட்டின் உரிமையாளர் விஜய் குப்தாவை சந்தேகத்தின் பேரின் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அதே போல் இன்ஜினியர் உடன் பணிபுரிந்தவர்களிடமும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி