ஆப்நகரம்

எத்தனை நாளா இந்த கூத்து? கதவை திறந்த மனைவி... அதிர்ந்துபோன கணவன்...

திருமணத்தை தாண்டி வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்ததை அறிந்த மனைவி இருவரையும் அடித்து துவைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samayam Tamil 13 Jan 2020, 5:38 pm
கணவன், மனைவி இருவருக்குள் சம்மந்தமின்றி தெரிந்த நபர்கள் நெருங்கி பழகினாலே அதானால் குழப்பம் ஏற்பட்டு விடும். அதுபோல மனைவியின் இடத்தை அபகரிக்க நினைத்த பெண் கையும் களவுமாக சிக்கிய போது எதுவும் நேரும் என்பதற்கு இந்த வீடியோ தகுந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
Samayam Tamil திருமணத்தை தாண்டி வேறொரு பெண்ணுடன் உறவு


உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவை சேர்ந்தவர் அல்கா வர்மா. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த நிஷா யாதவ் என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் அல்கா வர்மாவுக்கு தான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வேறொரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் இருவரும் அவரவர்கள் வீட்டுக்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த விஷயம் தனது மனைவிக்கு தெரியாமல் நீண்ட நாட்களாக காய் நகர்த்தி வந்துள்ளார் அல்கா வர்மா. ஆனால் சம்பவத்தன்று அனைத்தையும் அறிந்துகொண்ட நிஷா யாதவ் உறவினர்களுடன் தனது கணவர் அவருடைய காதலியுடன் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றார்.

அப்போது அப்பெண்ணுடடன் இருந்த அல்கா வர்மாவை கையும் களவுமாக பிடித்த அவர், கணவரின் காதலியின் முடியை பிடித்து அடித்து தனது கோபத்தை வெளிக்காட்டினார். அவருடன் வந்திருந்த உறவினர்களும் மாறி மாறி அல்கா வர்மாவை அடிக்க அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து இருவரையும் அழைத்து சென்றனர்.

அடுத்த செய்தி