ஆப்நகரம்

SHOCKING NEWS: 500 ரூபாய்க்காக இளம்பெண் கூட்டு பலாத்காரம்!

கணவர் 500 ரூபாய் தராததால், ஆத்திரமடைந்த வழிப்பறி கும்பல், மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 13 Sep 2021, 4:16 pm
பீஹார் மாநிலத்தில், தம்பதியை வழிமறித்த வழிப்பறி கும்பல், கணவர் 500 ரூபாய் தராததால், அவரது மனைவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil rape


நாட்டில் கடந்த சில நாட்களாக, பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மைசூரில் மாணவி பாலியல் பலாத்காரம், மும்பையில் பெண் பலாத்காரம், மஹாராஷ்டிராவில் சிறுமி பலாத்காரம், ஐதராபாத்தில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை என, பாலியல் பலாத்காரம் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் பீஹார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. பீஹார் மாநிலம், பாங்கா மாவட்டத்தில் உள்ள பகல்பூரில், கடந்த சனிக்கிழமையன்று இரவு, 25 வயது பெண், தனது கணவருடன் சென்று கொண்டிருந்தார்.
குஜராத் முதலமைச்சராக பதவியேற்றார் பூபேந்திர படேல்!
அப்போது, அங்கு வந்த சவன் யாதவ் மற்றும் கன்ஹையா என்ற இரு வாலிபர்கள், அப்பெண்ணின் கணவரிடம் மது மற்றும் உணவு வாங்குவதற்கு 500 ரூபாய் தரும்படி கேட்டனர். ஆனால் அவர் பணம் தர முடியாது என மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கணவரை இழுத்துச் சென்ற அடித்து உதைத்தனர்.

இதை அடுத்து, அந்த நபரின் மனைவியை, துப்பாக்கி முனையில் சவன் யாதவ் மற்றும் கன்ஹையா பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என இருவரும் அந்தப் பெண்ணை மிரட்டி உள்ளனர். பின்னர் ஒருவழியாக அங்கிருந்து தப்பி, அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டினுள் பாதிக்கப்பட்ட பெண் தஞ்சம் புகுந்தார்.

அந்தப் பெண்ணுக்கு ஆடை, உணவு கொடுத்து அப்பகுதியினர் உதவினர். இதன் பின்னர் காவல் நிலையம் சென்று நடந்ததை பாதிக்கப்பட்ட பெண் கூறினார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை முழு வீச்சில் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி