ஆப்நகரம்

ரயிலில் பூச்சி விழுந்த சாப்பாடு: பயணிக்கு ரூ.10,000 இழப்பீடு

ரயிலில் பூச்சி விழுந்த சாப்பாட்டு வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 7 May 2018, 9:52 pm
ரயிலில் பூச்சி விழுந்த சாப்பாட்டு வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil 116


ஷாலினி ஜெயின் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி சண்டிகரிலிருந்து டெல்லி வரை ரயிலில் பயணித்துள்ளார். அப்போது, ரூ.270 கொடுத்து ரயிலில் விற்கப்படும் உணவை வாங்கியுள்ளார்.

அந்த உணவில் பூச்சி இறந்து கிடப்பதைப் பார்த்து நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் கொடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து ரயில்வே நிர்வாகம் ஷாலினி ஜெயினுக்கு ரூ.10,000 இழப்பீட்டையும் அவர் வாங்கிய உணவுக்கான விலையையும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி