அரசு மருத்துவமனையில் அதிக எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தின் ரனம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா பேகம். இவர் தன்னுடைய 3வது பிரசவத்திற்காக ருத்ரூர் மண்டல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று லலிதாவிற்கு 5.25 கிலோகிராம் எடையில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், அறுவை சிகிச்சை இல்லாமல், லலிதாவிற்கு அதிக எடையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு முன்னதாக லலிதாவிற்கு 4 கிலோகிராம் எடையில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது லலிதாவும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
A male baby weighing 5.25 kg was born to Lathifa Begum of Ranampalli in Rudrur mandal through normal delivery at government hospital here on Monday.
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தின் ரனம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா பேகம். இவர் தன்னுடைய 3வது பிரசவத்திற்காக ருத்ரூர் மண்டல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று லலிதாவிற்கு 5.25 கிலோகிராம் எடையில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், அறுவை சிகிச்சை இல்லாமல், லலிதாவிற்கு அதிக எடையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு முன்னதாக லலிதாவிற்கு 4 கிலோகிராம் எடையில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது லலிதாவும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
A male baby weighing 5.25 kg was born to Lathifa Begum of Ranampalli in Rudrur mandal through normal delivery at government hospital here on Monday.