ஆப்நகரம்

சட்டமன்ற உறுப்பினருக்கு பள்ளி மாணவியை பரிசளித்த பெண் கைது

ஆர்ஜேடி சட்டமன்ற உறுப்பினருடன் பள்ளி மாணவியை உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்திய பெண் தரகரை நாலந்தா போலீசார் கைது செய்துள்ளனர்

TNN 26 Feb 2016, 1:19 pm
பிகார் ஷெரிப்: ஆர்ஜேடி சட்டமன்ற உறுப்பினருடன் பள்ளி மாணவியை உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்திய பெண் தரகரை நாலந்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil woman held for forcing girl into sex with mla
சட்டமன்ற உறுப்பினருக்கு பள்ளி மாணவியை பரிசளித்த பெண் கைது


கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதியன்று இரவில் நவாடா சட்டமன்ற உறுப்பினர் ராஜ்பல்லாப் யாதவுடன் ஒரு பள்ளி மாணவியை உடலுறவு கொள்ள சுலேகா தேவி என்ற பெண் கட்டாயப்படுத்தியுள்ளார். இவரையும், இவருக்கு உடந்தையாக இருந்ததாக இவரது தாய், தங்கை, மகள் மற்றும் ஒருவரையும் நாலந்தா போலீசார் இன்று கைது செய்தனர்.

இது குறித்து நாலந்தா போலீசார் கூறுகையில், "ஹில்சா காவல் நிலையம் அருகேயுள்ள காடி கிராமத்தில் பதுங்கி இருந்த இவர்கள் இன்று காலையில் கைது செய்யப்பட்டனர்" என்று தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதியன்று இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் எவ்வளவு நாட்கள் தலைமறைவாக இருக்க முடியும்?" என்று வினா எழுப்பினார்.

ஏற்கனவே, ராஜ்பல்லாப் யாதவின் ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி