ஆப்நகரம்

எச்ஐவியுடன் 3 ஆண்டுகளாக நீதிக்காக போராடி வெற்றி பெற்ற பெண்

தன் கணவர் மூலம் தனக்கு பரவிய எச்ஐவி நோயால் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணிற்கு மீண்டும் பணி வழங்கவும், பணிநீக்க காலத்திற்கான சம்பளத்தை வழங்கவும் 3 ஆண்டுகளாக நடந்த வழக்கில் தொழிலாளர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 4 Dec 2018, 12:11 pm
புனேவை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவருக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் 2 மாதம் பணிக்கு மருத்துவ விடுப்பு எடுத்தார்.
Samayam Tamil hiv


பின்னர் அவர் பணிக்கு திரும்பியதும் அந்த நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டை பெற வேண்டும் என அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தார். அந்நிறுவனமும் அதற்காக ஒப்புக்கொண்டது. அவரிடம் இருந்து அவர் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சான்றுகளை சமர்பிக்க கோரியது.

இந்த ஆவணங்களை அந்த பெண் சமர்பித்தவுடன் அந்நிறுவன ஊழியர்கள் அதை சரி பார்த்துள்ளனர். அப்பொது அந்த பெண்ணின் மருத்துவ சான்றில் அவருக்கு எச்ஐவி குறிப்பிட்ட இடத்தில் பாசிட்டிவ் என குறிப்பிட்டிருந்தது.

இது குறித்து அந்நிறுவன அதிகாரிகள் அந்த பெண்ணிடம் கேட்டனர். அதற்கு அவர் இந்த நோய் அவருக்கு தனது கணவர் மூலம் வந்ததாக குறிப்பிட்டார். இதை கேட்ட அந்நிறுவன அதிகாரிகள் சற்று அதிர்ந்து போனார்கள்.

அவர் தனக்கு எச்ஐவி இருப்பது உண்மைதான் என அவர் தெரிவித்த 30 நிமிடங்களில் அவர் அந்நிறுவனத்தில் இருந்து பணி நீக்கப்பட்டார் என்ற தகவல் அவருக்கு சொல்லப்பட்டது. இதை கேட்டதும் அந்த பெண் அதிர்ந்து போனார்.

மேலும் அவர் பணி நீக்க உத்தரவில் அவருக்கு எச்ஐவி உள்ளது தான் காரணம் என குறிப்பிடும் படி அவர் அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவரது பணி நீக்க உத்தரவில் அதிக விடுமுறை எடுத்தாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த பெண் புனே தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அந்நிறுவனம் அந்த பெண் தானாக தான் பணியில் இருந்து வெளியேறியதாகவும் தாங்களாக வெளியேற்றவில்லை எனவும் வாதாடினர்.

இவை எல்லாம் நடந்தது கடந்த 2015ம் ஆண்டு. அப்பொழுது முதல் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. சுமார் 3 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பில் எச்ஐவி இருக்கிறது என்பதற்காக ஒரு தொழிலாளியை பணியில் இருந்து நீக்க சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை. எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குவது என்பது மனித தன்மையற்ற செயலாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் அந்த தனியார் நிறுவனம். இந்த பெண்ணை எச்ஐவி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக தான் பணி நிக்கம் செய்ததது உறுதியாகியுள்ளது.

இதனால் அந்நிறுவனம் இந்த பெண்ணிற்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட காலம் முதல் அடுத்தாக மீண்டும் பணிக்கு சேர்க்கும் காலம் வரையிலான சம்பளத்தை அவருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த பெண்ணின் கணவர் எச்ஐவியால் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே உயிரிழிந்து விட்டார். தற்போது அந்த பெண்ணின் குடும்பமும் இவருக்கு இந்த நோய் இருப்பதால் இவரை கைவிட்டு விட்டது பரிதாபத்திற்கு உரிய விஷயம்.

அடுத்த செய்தி