ஆப்நகரம்

விமானத்தில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது!

விமானத்தில் பயணம் செய்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சக பயணியை ஹைதராபாத் விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 2 Feb 2019, 4:54 pm
விமானத்தில் பயணம் செய்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சக பயணியை ஹைதராபாத் விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil police


பெங்களூரைச் சேர்ந்தவர் இளம் பெண் (25). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, தன்னுடன் பயணம் செய்த சக பயணி ஒருவர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் என்று ஹைதராபாத்தில் விமானம் தரையிறங்கிய போது ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: விமானத்தில் இருக்கையில் தூங்கி எழுந்த நிலையில், நடுவில் இருந்தவரை தாண்டி விமானத்திற்கு நடுவில் வர முயற்சித்தேன். அப்போது, என்னை தவறான தீண்டல் மூலமாக என்னிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து, விமான பணிப்பெண்ணை எச்சரிக்கை கொடுத்தேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் பெண்ணின் புகாரைத் தொடர்ந்து அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சத்ய பிரகாஷை 354 பி ஐபிசி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று மற்ற ஒரு வழக்கில் விமான நிலைய போலீசார் நேபாளைச் சேர்ந்த கண்டேல் திகா குமாரி, ஷியாங்டன் நிர் மாயா மற்றும் பபிதா ஆகியோர் நேபாள தூதரகத்தின் போலி தடையில்லா சான்றிதழ் மூலம் துபாய் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர், துபாய், நேபாளம், ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், ஹைதராபாத், RGI Airport, Nepal, Bengaluru, Hyderabad, Woman Molested

அடுத்த செய்தி