ஆப்நகரம்

மருமகள் மீது தீராத கோபத்தில் 2 வயது பேத்தியை ஈவு இரக்கமின்றி கொன்ற பாட்டி.!!

மருமகள் மீதான தீராத கோபத்தில், தமது இரண்டு வயது பேத்தியை அவரது பாட்டியே ஆறாவது மாடியிலிருந்து கீழே வீசி கொன்ற சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Oct 2019, 6:09 pm
மும்பை மாநகரின் குரார் பகுதியில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், ருக்ஷனா ஓபிதுல்லா அன்சாரி என்ற 50 வயது பெண், தன் மகனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
Samayam Tamil wtc


இந்த நிலையில், சனிக்கிழமை காலை அந்த குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் அதிர்ச்சிகரமான பொழுதாக விடிந்தது.

ருக்ஷனா ஓபிதுல்லா அன்சாரியின் இரண்டு வயது பேத்தி, குடியிருப்பு வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அக்குழந்தையின் பெற்றோர் உள்பட குடியிருப்புலாசிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மும்பை போலீஸார், சிறுமியின் மரணம் குறி்த்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமியின் வீடு ஆறாவது தளத்தில் இருந்ததால், வீட்டு ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்திருப்பாரோ என்ற கோணத்தில் போலீஸார் முதலில் விசாரித்தனர்.

ஆனால், சம்பவத்தன்று இரவு சிறுமியின் வீட்டு ஜன்னலும், வாசல் கதவும் மூடப்பட்டிருந்ததால், அவர் தவறி விழுந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸாருக்கு தெளிவாக தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள், குடியிருப்புவாசிகள் என ஒவ்வொருவராக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமியின் பாட்டியான ருக்ஷனாவிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தான் தமது இரண்டு லயது பேத்தியை ஆறாவது மாடியிலிருந்து கீழே லீசி, ஈவு இரக்கமில்லாமல் கொன்றது தெரிய வந்தது.

தனது மருமகள் தன்னிடம் அடிக்கடி சண்டை போட்டு வருவதாகவும், அவருக்கு தக்க பாடம் புகட்டவே அவளது இரண்டு வயது மகளை (தனது பேத்தி) கொன்றாகவும் அன்சாரி போலீசிடம் அசால்ட்டாக கூறினார்.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி