ஆப்நகரம்

விமான நிலையத்தில் ‘பவர் பேங்க்’கை வீசிய பெண்: வெடித்ததால் பரபரப்பு!

டெல்லி விமான நிலையத்தில் பெண் ஒருவர் பவர் பேங்க்கை கீழே போட்டு உடைத்தார். அப்போது அது வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 30 Aug 2018, 8:47 pm
புதுடெல்லி : டெல்லி விமான நிலையத்தில் பெண் ஒருவர் பவர் பேங்க்கை கீழே போட்டு உடைத்தார். அப்போது அது வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil 6


டெல்லி விமான நிலையத்திற்கு 28 ம் தேதி டிபன்ஸ் காலனியில் உள்ள மாளவிகா திரிபாதி என்பவர் வந்தார். இவர் தர்மசலா செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கான டிக்கெட் வைத்து இருந்தார்.

இந்நிலையில் அவரின் லக்கேஜ்யை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படியான பொருள் இருப்பது தெரிந்தது.

அது மொபைல் போனுக்கு பயன்படுத்தப்படும் பவர் பேங்க். அதை கைப்பையில் வைக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அனால் கடுப்பான பெண் கோபமடைந்து சுவரை நோக்கி வீசினார். அதில்பவர் பேங்க் வெடித்தது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அடுத்த செய்தி