கொரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மரணத்திலும் மாண்பு வேண்டுமென்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இறந்த பெண் ஒருவரின் உடல் சுடுகாட்டுக்கு நகராட்சி குப்பை வண்டியில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. பாலமதி என்ற பெண் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அவரது வீட்டில் பல மாதங்களால உடல்நிலை நலிவுற்று இருந்துள்ளார்.
பாலமதிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் பாலமதியை அவரது சகோதரர் பிரபாஸ் சர்க்கார் உத்தரப் பிரதேச மாநிலம் ஜலாலாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளார்.
நேற்று மாலையில் பாலமதி திடீரென இறந்துவிட்டார். பாலமதியின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல உதவி கேட்டபோது, அவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சத்தால் யாரும் உதவ வரவில்லை. பாலமதி கொரோனாவால் உயிரிழக்கவில்லை என அவரது சகோதரர் கூறியும் யாரும் வரவில்லை.
பின்னர் பாலமதியின் உடலை எடுத்துச்செல்ல நகராட்சி சார்பில் குப்பை வண்டி அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பாலமதிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் பாலமதியை அவரது சகோதரர் பிரபாஸ் சர்க்கார் உத்தரப் பிரதேச மாநிலம் ஜலாலாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளார்.
நேற்று மாலையில் பாலமதி திடீரென இறந்துவிட்டார். பாலமதியின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல உதவி கேட்டபோது, அவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சத்தால் யாரும் உதவ வரவில்லை. பாலமதி கொரோனாவால் உயிரிழக்கவில்லை என அவரது சகோதரர் கூறியும் யாரும் வரவில்லை.
பின்னர் பாலமதியின் உடலை எடுத்துச்செல்ல நகராட்சி சார்பில் குப்பை வண்டி அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.