ஆப்நகரம்

சிறையில் பெண் கைதிகளுக்கு வீடியோ கால் பேசலாம்!

சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசும் வசதியை மகாராஷ்டிரா அறிமுகம் செய்துள்ளது.

Samayam Tamil 8 Oct 2018, 3:17 am
சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு குடும்பத்தினருடன் வீடியோ கால் பேசும் வசதியை மகாராஷ்டிரா அறிமுகம் செய்துள்ளது.
Samayam Tamil Video-Recruiting-and-Video-Call-Interview_optimized


நாட்டிலேயே முதல் முறையாக சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதியை மகராஷ்டிரா அரசு அறிமுகம் செய்துள்ளது.

பரிசோதனை முறையில் புனே யெரவாடாவில் உள்ள பெண்களுக்கான சிறையில் வீடியோ கால் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.

வீடியோ காலில் பேசும் பெண் கைதிகள் குடும்பத்தினருடன் மட்டுமே பேசலாம். இதனைக் கண்காணிக்க சிறை அதிகாரிகள் உடன் இருப்பார்கள். இதற்காக தனி அறை ஒன்றும் சிறை வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 5 நிமிடம் வீடியோ காலில் பேச 5 ரூபாய் கட்டணமும் பெறப்படுகிறது.

முன்னதாக இதே சிறையில் கைதிகள் உறவினர்களுடன் பேச ஒரு ரூபாய் நாணயங்கள் மூலம் போன் செய்யும் வசதியை (Coin Box Phone) ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி