ஆப்நகரம்

மருத்துவ பெண் கிளார்க் வேலைக்கு 100 பேருக்கு நிர்வாண பரிசோதனை - குஜராத்தில் மற்றொரு அதிர்ச்சி!

பெண் பயிற்சியாளர்களை நிர்வாணமாக நிற்க வைத்து சோதனை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Feb 2020, 3:05 pm
கடந்த சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பெண்கள் கல்லூரியில் 68 மாணவிகளிடம் மாதவிடாய் குறித்து அறிய கல்லூரி நிர்வாகம் முயன்றுள்ளது. இதையொட்டி ஆடைகளை வலுக்கட்டாயமாக அகற்றி சோதனை செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிகர சம்பவம் வெளியானதை அடுத்து கல்லூரி முதல்வர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அதே குஜராத் மாநிலத்தில் மற்றொரு மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil Test


சூரத் நகராட்சியில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் பெண் பயிற்சி கிளார்க்குகள் தங்களது பயிற்சி முடித்து நிரந்தர கிளார்க் பதவியில் சேரவிருந்தனர். இதற்கு முன்பு அனைவருக்கும் உடல் தகுதி சோதனை செய்யப்படுவது வழக்கம்.

இதையொட்டி பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்ற 100 பெண் பயிற்சியாளர்கள் உடல் தகுதி சோதனைக்காக பெண் மருத்துவரின் அறைக்கு தனித்தனியே வரவழைக்கப்பட்டனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக நிர்வாணமாக நிற்க வைத்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தரங்கமான கேள்விகளையும் கேட்டுள்ளனர். திருமணம் ஆகாத பெண்களிடம் கர்ப்பம் தொடர்பான சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 20ஆம் தேதி நடந்ததாக சொல்லப்படுகிறது.

சீறிப் பாய்ந்த குண்டுகள்; சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள்- காஷ்மீரில் அடுத்தடுத்து அதிர்ச்சி!

இந்நிலையில் தற்போது தான் இந்த விஷயம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை டீன் வந்தனா தேசாயிடம் கேட்ட போது, இந்த சம்பவம் பற்றி எந்த புகாரும் வரவில்லை.

இதுபற்றி விசாரிக்கப்படும். இதற்காக மூன்று நபர் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளோம். அவர்கள் நடந்தவற்றை விசாரித்து 15 நாட்களில் எங்களுக்கு அறிக்கையாக சமர்பிப்பர் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி