ஆப்நகரம்

உலகிலேயே அதிக முறை தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர் மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு

உலகிலேயே அதிக முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷியாம்பாபு சுபுதி வருகின்ற மக்களைவை தேர்தலில் போட்டியிட உள்ளார். இவர் 28 முறை மக்களைவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்

Samayam Tamil 1 Mar 2019, 10:52 am
உலகிலேயே அதிக முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷியாம்பாபு சுபுதி வருகின்ற மக்களைவை தேர்தலில் போட்டியிட உள்ளார்.
Samayam Tamil joi


ஒடிசா மாநிலத்தில் உள்ள பெர்காம்பூரை சேர்ந்தவர் ஷாம்பாபு சுபுதி. இவர் 1957 ஆம் ஆண்டியிலிருந்து தேர்தலில் போட்டியிடுகிறார். இதுவரை 28 மக்களவை தேர்தலை சந்தித்துள்ளார். ஒரு தேர்தலில்கூட இவர் வெற்றிபெற்றதில்லை.

ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக், முன்னாள் பிரதமர் பி வி நரசிம்மராவ், முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் சந்திரா ராத் மற்றும் சந்திர சேகர் சஹூ போன்ற முக்கிய அரசியல்வாதிகளை எதிர்த்து போடியிட்டுள்ளார்.

மேலும் அவர் வருகின்ற மக்களவை தேர்தலில் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள எசிக்கா மற்றும் பெர்காம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ எனக்கு வயது 85 ஆகிறது. எனது இளமை காலம் முதலே தேர்தலில் போட்டியிட தொடங்கிவிட்டேன். தேர்தலில் போடிட்டியிவதுதான் எனது வாழ்நாள் குறிக்கோள். நான் பல முறை தோல்வியடைந்திருக்கிறேன். ஆனால் அது முக்கியமில்லை . எல்லோரும் வெற்றிப்பெறத்தான் தேர்தலில் போட்டியிடுகின்றனர். என்னையும் ஒரு நாள் மக்கள் வெற்றிபெறச் செய்வார்கள்’ என்று கூறினார்.

மேலும் இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒருபோதும் இவரை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறியதேயில்லை என்றும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி