ஆப்நகரம்

சபரிமலை கோவிலுக்கு இளம்பெண் சென்றதாக பரபரப்பு!

சபரிமலை கோவிலுக்குள் இளம்பெண் ஒருவர் நுழைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 6 Nov 2018, 12:23 pm
சபரிமலை கோவிலுக்குள் இளம்பெண் ஒருவர் நுழைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil ierdfd2o_sabarimala-women-devotee-escorted_625x300_06_November_18


சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைஎதிர்த்து கேரளா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

நேற்று மாலை 5 மணி முதல் இன்று இரவு10.30 வரை சிறப்பு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் இன்று காலை இளம் வயதுபெண் ஒருவர் சபரிமலை கோயிலுக்குள்நுழைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அங்கு சலசலப்பு உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஏராளமானவலதுசாரி போராட்டக்காரர்கள், சன்னிதானத்தில் குவிந்தனர்.

இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரித்தது. அதில், கோயிலுக்குள் தரிசனம் செய்ய வந்த பெண்ணுக்கு 52 வயது என்பது தெரிய வந்துள்ளது. அவர் தன் மகனுடன் சபரிமலைக்கு வந்துள்ளார். அந்தப் பெண்ணும், அவரது மகனும் தற்போது காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி