ஆப்நகரம்

யமுனை ஆற்றில் 2 லட்சம் கனஅடி நீா் – டெல்லியில் வெள்ள அபாயம்

கனமழை காரணமாக ஹரியானா அரசு யமுனை ஆற்றில் 2 லட்சம் கனஅடி நீரை திறந்து விட்டுள்ளது. இதானல் டெல்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Jul 2018, 4:13 pm

கனமழை காரணமாக ஹரியானா அரசு யமுனை ஆற்றில் 2 லட்சம் கனஅடி நீரை திறந்து விட்டுள்ளது. இதானல் டெல்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil yamuna river.


ஹரியானா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக யமுனை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹத்திக்குந்த அணையில் இருந்து அதிகப்படியான உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது.

இன்று காலை நிலவரப்படி யமுனை ஆற்றில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 874 கனஅடி நீா் திறந்து விடப்பட்டது. தற்போது ஆற்றின் குறுக்கில் செல்லக்கூடிய பாலத்தை தொட்டுக்கொண்டு நீா் செல்கிறது. இதனால் மக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என்று அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு இன்னும் உயா்த்தப்படும் என்று ஹரியானா அரசு தொிவித்துள்ளது. இதனால் டெல்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழிவான பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி