ஆப்நகரம்

பிரிவினைவாதி யாசின் மாலிக் கட்சியைத் தகுதி நீக்கம் செய்த இந்திய அரசு

புல்வாமா கோரத் தாக்குதல் நடந்து 8வது நாள் மத்திய அரசு முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. அதன்படி கஷ்மீர் பிரிவினைவாத அரசியல்வாதிகளுள் ஒருவரான யாசின் மாலிக் உட்பட 18 பிரிவினைவாத அரசியல்வாதிகளை தகுதி நீக்கம் செய்துள்ளது மத்திய அரசு.

Samayam Tamil 23 Feb 2019, 11:05 am
புல்வாமா கோரத் தாக்குதல் நடந்து 8வது நாள் மத்திய அரசு முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. அதன்படி கஷ்மீர் பிரிவினைவாத அரசியல்வாதிகளுள் ஒருவரான யாசின் மாலிக் உட்பட 18 பிரிவினைவாத அரசியல்வாதிகளை தகுதி நீக்கம் செய்துள்ளது மத்திய அரசு.
Samayam Tamil yasin malik


முன்னதாக பஞ்சாப் மாநிலம், பஹவால்பூரில் உள்ள பாக்., கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்குச் சொந்தமான இஸ்லாமிய செமினரிக்களை பாக்., தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. தாங்கள் பயங்கரவாதிகளுக்கு புகலிடம், நிதி எதுவும் அளிக்கவில்லை என பாக்., பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் புல்வாமா கோரத் தாக்குதல் நடந்து 8வது நாள் மத்திய அரசு முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. அதன்படி கஷ்மீர் பிரிவினைவாத அரசியல்வாதிகளுள் ஒருவரான யாசின் மாலிக் உட்பட 18 பிரிவினைவாத அரசியல்வாதிகளை தகுதி நீக்கம் செய்துள்ளது மத்திய அரசு. அக்கட்சிகளைச் சேர்ந்த 155 அரசியவாதிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இனி இவர்களது கட்சிகள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல.

ஜம்மு காஷ்மீர் லிபரேஷன் ஃபிரண்ட் என்ற இவரது கட்சியின் அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. இவர்களைப் போன்ற பிரிவினை கட்சிகளுக்குப் பாதுகாப்பளிப்பதற்கு பதிலாக மத்திய அரசு மக்களுக்கு நல்லது செய்ய பணத்தை செலவிடலாம் என அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி