ஆப்நகரம்

யோகா பண்ணுங்க பாஸ்; நோய் காத்தா பறந்து போயிடும்; அட்வைஸ் சொல்லும் வெங்கையா நாயுடு!

யோகா செய்தால், அனைத்து நோய்களும் காணாமல் போய்விடும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

TNN 5 Nov 2017, 9:01 pm
விஜயவாடா: யோகா செய்தால், அனைத்து நோய்களும் காணாமல் போய்விடும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
Samayam Tamil yoga is the best cure for disease says venkaiah naidu
யோகா பண்ணுங்க பாஸ்; நோய் காத்தா பறந்து போயிடும்; அட்வைஸ் சொல்லும் வெங்கையா நாயுடு!


ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள அட்கூர் கிராமத்தில் ஸ்வர்ணா பாரத் அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து, பொதுமக்கள் மத்தியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.

அப்போது, மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு நோய்கள் வந்து ஆக்கிரமிக்கின்றன. அதனை வென்று மீண்டு வர யோகா சிறந்த ஒன்று. மக்கள் ஆரோக்கியமான உடல்நலத்துடன் இருக்க பாரம்பரிய உணவுப் பொருட்களை உண்ண வேண்டும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஏழைகளுக்கு சுகாதார சேவைகளை வழங்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். இந்தியா கிராமங்கள் நிறைந்த நாடு. அத்தகைய கிராமங்களில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை.

அதனைக் கருத்தில் கொண்டு அரசுகள் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நாட்டின் சுகாதாரம் மேம்பட அரசு - தனியார் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

Yoga is the best cure for disease says Venkaiah Naidu.

அடுத்த செய்தி