ஆப்நகரம்

உத்தரப்பிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் பான்மசாலா, புகையிலை பயன்படுத்தத் தடை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும், பான்மசாலா, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

TNN 22 Mar 2017, 4:41 pm
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும், பான்மசாலா, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil yogi adityanath effect no pan masala gutka in govt offices
உத்தரப்பிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் பான்மசாலா, புகையிலை பயன்படுத்தத் தடை


இதற்கான உத்தரவை அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார். முதல்கட்டமாக, இன்று அரசு தலைமைச் செயலகத்தில் திடீர் சோதனை நடத்திய முதல்வர் ஆதித்யநாத், அங்கு பறிமுதல் செய்த பான்மசாலா, புகையிலை பொட்டலங்களை அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களிலும் பின்பற்றும்படியும், தவறும்பட்சத்தில் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.


உத்தரப்பிரதேச அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் புகையிலை, பான் மசாலா பயன்படுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை! #UP #YogiAdityanath #PanMasala pic.twitter.com/3Xkajx3ojY — Samayam Tamil (@SamayamTamil) March 22, 2017

அடுத்த செய்தி