ஆப்நகரம்

உ.பி., எம்எல்ஏ-க்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்த யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில், மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக வெற்றி பெற்று எம்.பி.,க்களாக தேர்வாகியுள்ளவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பு மதிய விருந்து அளித்து உபசரித்தார்.

Samayam Tamil 29 May 2019, 4:11 pm
உத்தரபிரதேசத்தில், மக்களவை தேர்தலில் பாஜக சார்பாக வெற்றி பெற்று எம்.பி.,க்களாக தேர்வாகியுள்ளவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பு மதிய விருந்து அளித்து உபசரித்தார்.
Samayam Tamil yogi-adityanath


மாநில பாஜக தலைவர் மகேந்திரநாத் பாண்டே மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் வென்ற ஸ்மிருதி இரானி உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எம்.பிக்களாக தேர்வானவர்கள் தொகுதிகளில் கவனத்தைச் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தினார். நடைபெறவுள்ள 11 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் வைத்த கூட்டணி மிக குறைந்த வாக்குகளைப் பெற்றதால் பாஜக-வின் ஆதிக்கம் அங்கு அதிகமாக உள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள பெரும்பான்மை தொகுதிகளை பாஜக தட்டிச் சென்றதால் அங்கு காங்கிரஸ்ஸின் ஆதிக்கம் குறைந்துள்ளது.

அடுத்த செய்தி