ஆப்நகரம்

அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என மாத்தியே ஆகனும் - அடம்பிடிக்கும் யோகி அரசு

அடுத்தாண்டு நடைப்பெற உள்ள கும்பமேளா தொடங்குவதற்குள், அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்ய யோகி ஆதியனாத்தின் உத்தரப் பிரதேச அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.

Samayam Tamil 26 May 2018, 10:08 am
அடுத்தாண்டு நடைப்பெற உள்ள கும்பமேளா தொடங்குவதற்குள், அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்ய யோகி ஆதியனாத்தின் உத்தரப் பிரதேச அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil allahabadh


12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அலகாபாத் கும்பமேளாவில் கலந்து கொள்ள உலகின் பல பகுதியிலிருந்து பக்தர்களும், பார்வையாளர்களும் வருவதும் வழக்கம். ஒரு நிகழ்விற்கு பல லட்சம் மக்கள் கூடுவதில் இந்த கும்பமேளா தான் முதல் இடம்பிடித்துள்ளது.

கும்பமேளா நிகழ்விற்கான பணிகள் தற்போதே தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில், அலகாபாத் என்ற பெயரை, பிரயாக்ராஜ் என மாற்றுவது குறித்தும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.



ஏற்கனவே, கும்பமேளாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள பல பேனர்களில் அலகாபாத் என்பதற்கு பதிலாக பிரயாக்ராஜ் என அச்சிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி