ஆப்நகரம்

அரசு சார்பில் பிரமாண்ட தீபாவளி திருவிழா

அயோத்தியில் அரசு சார்பில் தீபாவளி திருவிழாவை பிரமாண்டமாக கொண்டாட உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

TOI Contributor 1 Oct 2017, 8:17 pm
அயோத்தியில் அரசு சார்பில் தீபாவளி திருவிழாவை பிரமாண்டமாக கொண்டாட உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil yogi government plans grand diwali in ayodhya
அரசு சார்பில் பிரமாண்ட தீபாவளி திருவிழா


தீபாவளியை சிறப்பாக கொண்டாட நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசு, அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்து உள்ளது.

இது குறித்து உத்தரப்பிரதேச மாநில தகவல் மற்றும் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் அவானிஷ் கே அவஸ்தி கூறுகையில், அயோத்தியில் நடைபெறும் இந்த தீபாவளி திருவிழாவில், முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ராம் நாயக் ஆகியோர் பங்கேற்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி