ஆப்நகரம்

பணமதிப்பிழப்பு தொடா்பாக பிரதமருக்கு நீங்களும் கருத்து சொல்லலாம்

பண மதிப்பிழப்பு தொடா்பாக மக்கள் தங்களது கருத்துகளை NM App மூலம் தொிவிக்கலாம் என்று பிரதமா் மோடி தொிவித்துள்ளாா்.

TOI Contributor 8 Nov 2017, 10:29 am
பண மதிப்பிழப்பு தொடா்பாக மக்கள் தங்களது கருத்துகளை NM App மூலம் தொிவிக்கலாம் என்று பிரதமா் மோடி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil you can comment on the prime minister for a demonetization
பணமதிப்பிழப்பு தொடா்பாக பிரதமருக்கு நீங்களும் கருத்து சொல்லலாம்


கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி, உயா் மதிப்பு தாள்களாக கருதப்பட்ட பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

இதனை முன்னிட்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பலன்கள் குறித்த குறும்படம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த குறும்படத்தை பிரதமா் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் கறுப்பு பணத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையால் மக்களின் கைகளில் பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து மக்கள் தங்களின் கருத்துக்களை NM app மூலம் தெரிவிக்கலாம் என பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த ஆப் மூலம் மக்கள் தங்களின் கருத்துக்களை பிரதமரிடம் நேரடியாக தெரிவிக்கலாம். கறுப்புப் பண ஒழிப்பு என்பது 125 கோடி இந்தியர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் டுவிட்டரில் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி