ஆப்நகரம்

எனக்கு நீங்க சொன்ன அந்த விஷயம்; நடக்காமலே போச்சே - சுஷ்மா குறித்து ஸ்மிருதி இரானி உருக்கம்!

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவிற்கு, ஸ்மிருதி இரானி உருக்கமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 7 Aug 2019, 12:10 pm
பாஜகவின் மூத்த பெண் தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். இவர் டெல்லியின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Samayam Tamil Smriti Irani


சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Also Read This:

Sushma Swaraj Died: ஓராண்டிற்குள் மூன்று முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி..!

வழக்கறிஞர், எம்எல்ஏ, முதல்வர், மத்திய அமைச்சர்- சுஷ்மா ஸ்வராஜ் கடந்து வந்த பாதை..!

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக் கொண்டாலும் காப்பாற்றுவேன்: சுஷ்மாவின் பாசம்!!

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது டுவிட்டரில் சுஷ்மா ஸ்வராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அக்கா... நீங்கள் என்னையும், உங்கள் மகள் பன்சூரியையும் மதிய உணவிற்கு ஓட்டல் ஒன்றிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தீர்கள்.

அதுவும் கொண்டாட்டம் நிறைந்த மதிய உணவு வேளையில்... இதற்காக சிறப்பான உணவகம் ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறியிருந்தீர்கள்... ஆனால் அந்த வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றாமலேயே சென்று விட்டீர்கள் என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி