ஆப்நகரம்

கோயில் வேணுமா? மசூதி வேணுமா? பேரம் பேசும் மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டுமா? பாபர் மசூதி கட்ட வேண்டுமா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 9 Dec 2017, 11:51 am
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டுமா? பாபர் மசூதி கட்ட வேண்டுமா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil you want mandir or masjid modi asks cong
கோயில் வேணுமா? மசூதி வேணுமா? பேரம் பேசும் மோடி


அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கின் விசாரணையை 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை ஒத்திப்போட காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

நேற்று பனஸ்கந்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கபில் சிபலின் கோரிக்கையை கடுமையாகக் கண்டித்தார். “காங்கிரஸ் கட்சி ஏன் ராமர் கோயில் வழக்கை குஜராத் தேர்தலுடன் இணைக்கிறது என்ற கேள்விக்கு பதில் கூறிவில்லை. அவர்கள் ஏன் ராமர் கோயில் வழக்கை ஒத்திப்போட முயல வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

“கபில் சிபல் தன்னை இஸ்லாமிய அமைப்பின் வழக்கறிஞர் அல்ல என்று சொல்லிக்கொள்கிறார். அப்படியானால் அவர் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று சொல்கிறாரா? இதற்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் அவரது புதிய தலைவரை (ராகுல் காந்தி) பேசச் சொல்லட்டும்.” என்றும் பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

அடுத்த செய்தி