ஆப்நகரம்

மார்ச் 1 முதல் ரயில் நிலையங்களில் முன்பதிவு அட்டவணை ஒட்டப்படாது!!

ரயில்வேதுறை வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஏ, பி மற்றும் ஏ1 ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு அட்டவணை ஒட்டப்படாது என அறிவித்துள்ளது

Samayam Tamil 14 Feb 2018, 10:08 pm
சென்னை: ரயில்வேதுறை வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஏ, பி மற்றும் ஏ1 ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு அட்டவணை ஒட்டப்படாது என அறிவித்துள்ளது.
Samayam Tamil you wont see reservation charts on trains at major stations for six months from march 1
மார்ச் 1 முதல் ரயில் நிலையங்களில் முன்பதிவு அட்டவணை ஒட்டப்படாது!!


கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி, அதிக பயணிகள் வரும் ரயில்நிலையங்களில் முன்பதிவு அட்டவணை ஒட்டப்படக்கூடாது என உத்தரவு வெளியானது. இந்த உத்தரவின் அடிப்படையில், சோதனை முயற்சியாக முக்கியமான ரயில் நிலையங்களில் மார்ச் 1 ஆம் தேதி முதல் முன்பதிவு அட்டவணை ஒட்டப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காகிதங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ரயில் நிலையங்களில் டிஜிட்டல் முறையில் அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி