ஆப்நகரம்

ஆழ்துளைக் கிணற்றில் மீண்டும் ஒரு போராட்டம்; 4 வயது சிறுவனின் நிலை என்ன?

திறந்தவெளி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்க தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 2 Dec 2020, 9:33 pm
விவசாய தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும் போது, நீர் கிடைக்காத குழிகள் அப்படியே அலட்சியமாக விடுவதால் தொடர்ந்து விபரீதங்கள் நிகழ்கின்றன. அதுவும் பச்சிளங் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இதன் மீட்பு பணிகளுக்கான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதேசமயம் தண்ணீர் கிடைக்காத ஆழ்துளைக் கிணறுகளை முறையாக மூடி பராமரிக்க வேண்டியதும் அவசியம். இவ்வாறு அலட்சியம் காட்டுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Samayam Tamil Borewell Accident


இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா நகரின் குல்பாஹர் பகுதியில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணற்றில் இன்று 4 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான். இதுபற்றி சிறுவனின் குடும்பத்தார் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு சோகம்: மீண்டும் தடை போட்ட பசுமை தீர்ப்பாயம்!

அவர்கள் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எத்தனை அடி ஆழத்தில் சிறுவன் இருக்கிறான் என்பதைக் கண்டறியும் பணி நடந்து வருகிறது.

அதேசமயம் சிறுவனுக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளுக்காக பலரது உதவிகளையும் நாடியுள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக சிறுவன் பாதுகாப்பாக மீண்டு வர வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி