ஆப்நகரம்

பெருவெள்ளத்தில் பிறந்த உயிர்; தத்தளிக்கும் மீட்பு படகில் நிகழ்ந்த ஆச்சரியம்!

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி தவித்து வந்த நிலையில் மீட்பு படகில் நடந்த ஆச்சரியத்தை இங்கே காணலாம்.

Samayam Tamil 27 Jul 2020, 6:46 am
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் சில மாநிலங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று பீகார். இம்மாநிலத்தின் புர்ஹி கண்டக் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பீகார் மாநிலத்தின் 12 மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை-யின் 21 குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள கோபாரி கிராமத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ரிமா தேவி(25) என்ற கர்ப்பிணி பெண்ணும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்.
Samayam Tamil Baby Born at Bihar Rescue Boat


தனது வீட்டைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்ததால் வெளியேற முடியவில்லை. இதுபற்றி தகவலறிந்து வந்த மீட்பு படையினர் கர்ப்பிணியை பத்திரமாக மீட்டனர். படகில் சென்று கொண்டிருந்த போதே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

திடீரென பாய்ந்த முதலை; சில வினாடிகளில் மாயமான சிறுவன் - அடுத்து நடந்த பயங்கரம்!

உடனே சமூக சுகாதாரப் பணியில் ஈடுபட்டு வரும் ஆஷா பணியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மற்றொரு படகில் வந்து சேர வெள்ளத்திற்கு நடுவில் மீட்பு படகிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது.

இதில் பிற்பகல் 1.40 மணியளவில் அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதுபற்றி தேசிய பேரிடர் மீட்பு படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எங்கள் படையின் 9வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு கர்ப்பிணி பெண் சிக்கிக் கொண்டது பற்றி தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று மீட்டனர். இதையடுத்து மீட்பு படகிலேயே குழந்தை பிறந்துள்ளது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தாயும், குழந்தையும் மோடிஹரி மாவட்டத்தின் பஞ்சாரியா கிராமத்தில் உள்ள பொது சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மகள்களை மாடுகளாக மாற்றிய விவசாயி; டிராக்டரை அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர்!

அங்கு இருவரும் நலமாக இருக்கின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மருத்துவ உதவிகள் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் பிரசவத்தை எப்படி கையாள்வது என்றும் கற்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு பெருவெள்ளத்தில் இருந்து தற்போது வரை எங்கள் மீட்புப் படகுகளில் 10 குழந்தைகள் பிறந்துள்ளன என்றார்.

அடுத்த செய்தி