ஆப்நகரம்

"ஐடியாவுக்கு காசு கொடுங்க..!"-நடிகை ரம்யா வீட்டு முன் போராட்டம் நடத்திய இளைஞர்..!

தான் அளித்த ஐடியாவுக்கு காங்கிரஸ் எம்.பியும்,நடிகையுமான ரம்யா பணம் தராமல் ஏமாற்றி வருவதாக இளைஞர் ஒருவர் போராட்டத்தில் குதித்துள்ளார்.

TNN 29 Nov 2016, 5:25 pm
தான் அளித்த ஐடியாவுக்கு காங்கிரஸ் எம்.பியும்,நடிகையுமான ரம்யா பணம் தராமல் ஏமாற்றி வருவதாக இளைஞர் ஒருவர் போராட்டத்தில் குதித்துள்ளார்.
Samayam Tamil youth asks ramya to pay the money for his idea sits on dharna
"ஐடியாவுக்கு காசு கொடுங்க..!"-நடிகை ரம்யா வீட்டு முன் போராட்டம் நடத்திய இளைஞர்..!


சமீபத்தில் மத்திய அரசால் “ ஒரு எம்.பி-ஒரு ஐடியா” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு எம்.பியும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஐடியா ஒன்றை அளிக்க வேண்டும்.அதில சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் ஐடியாவிற்கு 2.5 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும்.

இதனை தொடர்ந்து தனது தொகுதியான மாண்டியாவுக்கு உட்பட்ட மக்கள் இந்த திட்டத்திற்கு ஐடியா அளிக்கலாம் எனவும்,வெற்றி பெரும் ஐடியாவை அளித்தவருக்கு அதற்கான பரிசுத் தொகை அளிக்கப்படும் எனவும் காங்கிரஸ் எம்.பியான நடிகை ரம்யா அறிவித்தார்.இதனை தொடர்ந்து சுமார் 117 பேர் தங்களது ஐடியாவை ரம்யாவிடம் சமர்ப்பித்திருந்தனர்.இதில் பாண்டியன் என்பவரது ஐடியாவை தேர்ந்தெடுத்த ரம்யா,அதனை தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பி வைத்தார்.தேசிய அளவிலான போட்டியிலும் பாண்டியனின் ஐடியா வெற்றி பெற்றது.

இதற்கான வெற்றி விழாவில் கலந்து கொண்ட எம்.பி ரம்யா,பரிசுத் தொகையான 2.5 லட்சத்தையும் பெற்றார்.இந்நிலையில் நேற்று திடீரென ரம்யாவின் வீட்டிற்கு முன் தர்ணாவில் ஈடுபட்ட பாண்டியன்,தனது ஐடியாவிற்கான பரிசுத் தொகையை ரம்யா அளிக்காமல் ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவரிடன் முறையிட்ட போது தன்னை ’ரவுடி’ என கூறிய ரம்யா,வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் பாண்டியன் தெரிவித்தார்.பாண்டியனின் தர்ணா போரட்டத்தை தொடர்ந்து,ரம்யாவின் ஆதரவாளர்கள் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பாண்டியனுக்கு ஆதரவாக பொதுமக்கள் சிலரும் அங்கு கூடினர்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர்,பாண்டியனை கைது செய்ய முயன்றனர்.ஆனால் இதற்கு அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,பாண்டியனை சமாதானப்படுத்திய காவல்துறையினர் போரட்டத்தை கைவிடச் செய்தனர்.

Youth asks Ramya to pay the money for his "idea", sits on Dharna

அடுத்த செய்தி