ஆப்நகரம்

டிவிய உடைச்சதால கோபத்துல மகனை போட்டுத்தள்ளிய தந்தை போலீசில் சரண்டர்!

குஜராத் மாநிலத்தில் டிவி சேனலுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்று டிவியை உடைத்த மகனை கொலை செய்த தந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Jan 2019, 11:15 am
குஜராத் மாநிலத்தில் டிவி சேனலுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்று டிவியை உடைத்த மகனை கொலை செய்த தந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil murder.


குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த் பர்மர் (52). இவரது மனைவி லலிதாபென். இவர்களது மகன் அஜய் (25).

இந்த நிலையில், லலிதாபென் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: டிவி சேனலுக்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்று கூறி அஜய் டிவியை உடைத்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த கோவிந்த் கோபத்தில் அருகிலிருந்த பெரிய தடியை எடுத்து அஜய்யின் தலையில் ஓங்கி அடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

சம்பவத்தன்று கோமித்பூர் பகுதியில் உள்ள சகோதரிக்கு வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை 4 மணிக்கு தான் வீடு திரும்பினேன். அப்போது எனது கணவர் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அதனால், நான் மாக்கெட்டுக்கு சென்று கொஞ்சம் மளிகை பொருட்களை வாங்கி வந்தேன். நான் வீட்டிற்கு சென்று பார்த்த போது எனது மகன் தலையில் இருந்து ரத்தம் கொட்டியபடி வீட்டில் அப்படியே கீழே விழுந்து கிடந்திருந்தான் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, அம்ரைவாதி காவல் நிலையம், இன்ஸ்பெக்டர் ஒதர் தேசாய் கூறுகையில், மகனை தானே கொன்றதாக கூறி கோவிந்த் சரணடைந்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும், அவரை கைது செய்து அவரிடமிருந்த ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி