ஆப்நகரம்

டிக் டாக் விபரீதம் - நண்பன் கண்முன்னே இப்படியொரு கொடூர மரணமா? உருக்குலைந்த இளைஞர்கள்!

பானிபட் நகரில் டிக் டாக் வீடியோ எடுக்கும் முயற்சியில், இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 May 2019, 12:48 pm
ஹரியானா மாநிலம் பானிபட் அருகே ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டு 4 இளைஞர்கள் டிக் டாக் வீடியோ எடுக்க முயற்சித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக, பல்வேறு விதமாக வீடியோ மற்றும் செல்பி எடுத்து வந்துள்ளனர்.
Samayam Tamil Tik Tok Accident


அப்போது திடீரென அந்தப் பாதையில் ரயில் வந்துள்ளது. இதனைக் கண்ட ஒரு இளைஞர், உடனே கீழே தாவியுள்ளார். ஆனால் மற்றவர்களால் கீழே இறங்க முடியவில்லை. அதற்குள் ரயில் அவர்கள் மூவர் மீதும் மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.

இதில் இளைஞர்களின் உடல் பாகங்கள் சிதறின. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இளைஞர்கள் உடல், அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செல்பி மற்றும் டிக் டாக் வீடியோ போன்றவற்றால் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன. இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், இளைஞர்கள் திருந்திய பாடில்லை.

அடுத்த செய்தி