ஆப்நகரம்

இந்திய இளைஞர்களுக்கு வேலையில்லை... அதிர வைக்கும் ஜாப் ரிப்போர்ட்... டபுள் மடங்காக எகிறிய ஷாக்!

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக ஐ.எல்.ஓ அறிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய இளைஞர்களின் நிலை தான் மிகவும் மோசமாக சென்று கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Authored byமகேஷ் பாபு | Samayam Tamil 27 Mar 2024, 1:38 pm
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (IHD) ஆகியவை இணைந்து ”இந்தியாவின் வேலைவாய்ப்பு ஆய்வறிக்கை 2024”ஐ வெளியிட்டுள்ளன. இதனை தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்தா நாகேஸ்வரன் நேற்று வெளியிட்டார். இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என மத்திய, மாநில அரசுகள் பேசி வருவது வெறும் பொய்யா? என்று கேட்கத் தோன்றுகிறது.
Samayam Tamil Unemployment


வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

இந்த அறிக்கையில் மிகவும் முக்கியமாக பார்க்க வேண்டியது, இந்தியாவில் வேலையின்றி சிரமப்படும் நபர்களின் மொத்த எண்ணிக்கையில் 83 சதவீதம் பேர் இளைஞர்கள். மேலும் பள்ளிக் கல்வியை முடித்து விட்டு வேலை கிடைக்காமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டில் 35.2 சதவீதமாக இருந்த நிலையில், 2022ல் 65.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிட்டதட்ட இரண்டு மடங்கு என்று சொல்லலாம்.
இனி ஈஸியா லடாக் போகலாம்.. எந்த வானிலையிலும் செல்லலாம்.. தூரமும் குறைவு : புதிய சாலை வந்தாச்சு!!
இளைஞர்களின் நிலை மோசம்

2000 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் படித்த வேலைக்கு சரியான வேலை கிடைக்காமல் வேறு வேலையில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத சூழல் அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் வேலைவாய்ப்பு ஆய்வறிக்கை 2024 வெளியிட்ட தகவலின்படி, கடந்த 20 ஆண்டுகளில் முரண்பாடான விஷயங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.

துறை சார் வளர்ச்சி

விவசாயம் அல்லாத துறைகளில் வளர்ச்சி என்பது ஒரு பெரிய சவாலாகவே காணப்படுகிறது. விவசாயத் துறையை பொறுத்தவரையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். மற்ற துறைகளின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. ஆனால் அவற்றில் போதிய அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தான் சிக்கலே. அப்படியே உருவாக்கினாலும் முறையற்ற வேலைவாய்ப்பிற்கு தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
பெங்களூரு வெப்ப அலைகள்... குருநாதா தாங்க முடியல... காத்திருக்கும் அடுத்த ஷாக், தப்பிக்க என்ன வழி?
திறன் வளர்ப்பு

அதாவது, வேலைக்கு தகுந்த வரிச் சலுகைகள், சமூகப் பாதுகாப்பு, விடுப்பு சலுகைகள், பணி நீக்கத்திற்கு முன்பு முறையான அறிவிப்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு போன்றவை கிடைப்பதில்லை. எனவே மக்கள் குறைந்த சம்பளத்தில் அதிக வேலைப் பளுவுடன் நெருக்கடியான நிலையில் தான் பணியாற்றுகின்றனர். இதுதவிர இந்திய இளைஞர்கள் போதிய அளவில் திறன்களை வளர்த்து கொள்வதில்லை எனக் கூறுகின்றனர்.

தொழில்நுட்ப அறிவு

குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொள்வதில் பின்னடைவை சந்திக்கின்றனர். உதாரணமாக 90 சதவீதம் பேருக்கு Excel Sheet-ல் ஒரு பார்முலாவை போடக் கூட தெரிவதில்லை. 60 சதவீதம் பேருக்கு ஒரு ஃபைலை Copy, Paste செய்ய தெரியவில்லை. 75 சதவீதம் பேருக்கு ஒரு Attachment உடன் இ-மெயில் அனுப்ப தெரியவில்லை என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
எழுத்தாளர் பற்றி
மகேஷ் பாபு
செய்தி தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் என 8 ஆண்டுகள் அனுபவம். எளிய மக்களின் குரலாகவும், சமூக அவலங்களை சுட்டிக் காட்டும் வகையிலும் எழுதப் பிடிக்கும். அரசியல் செய்திகளை வழங்குவதில் தீராத ஆர்வம் உண்டு. சமயம் தமிழ் ஊடகத்தில் Senior Digital Content Producer ஆக பணியை தொடர்ந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி