ஆப்நகரம்

கொந்தளித்த மாணவர் சமுதாயம்; வழிநடத்திச் சென்ற மும்பை இளைஞர்கள்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு எதிராக மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Samayam Tamil 23 Dec 2019, 1:43 pm
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டங்கள் நடந்தன.
Samayam Tamil CAA Protest


இதில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பின்றி உள்ளூர் மக்களே பெரும்பாலும் கலந்து கொண்டனர். தாராவி, செம்பூர், மரோல், மிரா சாலை, மாலாத், மால்வானி, ஜோகேஷ்வரி, தானே, பன்வேல் உள்ளிட்ட பகுதிகளில் திரண்ட மக்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இப்படி பண்றீங்களே, உங்களுக்கு வெட்கமாக இல்ல - பிரக்யா தாக்கூர் மீது கடுப்பான மக்கள்!

இதற்கிடையில் கட்கோபர் பகுதியில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. தானேவின் லூயிஸ் வாடியில் நடந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த மாணவர் மனாஸ் குப்பி கூறுகையில், மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.

அதன் காரணமாக நாங்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக பாஜக கூறி வருகிறது. நாங்கள் பிரிவினையை ஏற்படுத்தும் சட்டத்தை எதிர்த்து, ஒன்றுபட்ட இந்தியாவிற்காக கைகோர்த்து நிற்கின்றோம் என்று தெரிவித்தார்.

டெல்லியில் மீண்டும் ஒரு பயங்கரம்; பற்றி எரிந்த தீயில் பலர் பலியான சோகம்!

அனைத்து பேரணிகளிலும் தேசியக் கொடி, போராட்ட பதாகைகள் உள்ளிட்டவற்றை இளைஞர்கள் ஏந்திச் சென்றனர். செம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 6ஆம் வகுப்பு படிக்கும் சித்திக் ஷேக் கூறுகையில், நான் இங்கே எதற்காக அமர்ந்திருக்கிறேன் என்று தெரியும்.

எனது இந்தியா பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார். இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதாக ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரகுமான் மீது சர்ச்சை எழுந்துள்ளது.

பாஜக தலைமையில் ஆட்சி அமையும்: பின்னடைவிலும் ரகுபர் தாஸ் நம்பிக்கை

இதுதொடர்பாக காவல்துறை இயக்குநர் சுபோத் ஜெய்ஸ்வாலிடம் கூடுதல் தலைமை செயலாளர் சஞ்சய் குமார் அறிக்கை கேட்டுள்ளார்.

அடுத்த செய்தி