ஆப்நகரம்

தண்ணீருக்காக ஏலத்தில் விடப்படும் வாலிபர்கள்!

ஆக்ரா அருகேயுள்ள கிராமத்தில் கார்பரேஷன் தண்ணீர், குடிநீர் சரிவரக் கிடைப்பதில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் அளித்தும் பலன் இல்லாததால் இளைஞர்கள் சிலர் தங்களை ஏலத்தில் விட அனுமதித்துள்ளனர்.

Samayam Tamil 22 Jan 2019, 12:10 pm
ஆக்ரா அருகேயுள்ள கிராமத்தில் கார்பரேஷன் தண்ணீர், குடிநீர் சரிவரக் கிடைப்பதில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் அளித்தும் பலன் இல்லாததால் இளைஞர்கள் சிலர் தங்களை ஏலத்தில் விட அனுமதித்துள்ளனர்.
Samayam Tamil water agra


இந்த இளைஞர்களை ஏலத்தில் விட்டால் வரும் பணத்தைக் கொண்டு தங்களது தண்ணீர் தேவையை தாங்களே பூர்த்தி செய்துகொள்ள கிராமவாசிகள் முடிவெடுத்துள்ளனர். இச்சம்பவம் காரணமாக பணியில் ஈடுபாடற்ற அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் வந்து குவிகின்றன.

யுவ ஜன் கல்யான் சமிதி என்ற பெயரில் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர் அந்த இளைஞர்கள். அந்த கிராமத்தில் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாநில மாஜிஸ்ட்ரேட் முதல் இந்திய ஜனாதிபதி ரமநாத் கோவிந்த் வரை அனைவரிடமும் தங்கள் கிரத்தின் அன்றாட தண்ணீர் தட்டுப்பாடு பற்றி மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர் கிராம மக்கள்.

சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் எங்கள் கிராம வாசிகள் குடிநீர் பெற 72 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியுள்ளது என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பரிதாபாத்தில் வேலை பார்க்கும் சந்திரபால் சிங் இதற்காக தன் வேலையை விட்டுவிட்டு இந்த கிராமத்துக்கு திரும்பிவிட்டார். தன் தந்தை குடிநீர் பெற தினமும் 3 கிலோ மீட்டர் நடப்பதால் அவருக்கு உதவ தான் வேலையை விட்டு மீண்டும் கிராமத்துக்கு வந்ததாக அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அடுத்த செய்தி