ஆப்நகரம்

விமான நிலையத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கத்திக்குத்து!

விசாகப்பட்டினம்: ஜெகன் மோகன் ரெட்டி மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Oct 2018, 2:22 pm
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஐதராபாத் செல்ல இன்று பிற்பகல் விசாகப்பட்டினம் விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.
Samayam Tamil Jagan


அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், ஜெகன் மோகன் ரெட்டியிடம் செல்பி எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். இந்நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் அவரது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்துள்ளது. உடனே தாக்குதல் நடத்தியவரைப் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் சிகிச்சைக்காக ஜெகன் மோகன் ரெட்டி மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டார். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய நபர், விமான நிலைய கேண்டீனில் பணிபுரிந்து வந்த ஸ்ரீனிவாஸ் என்று தெரியவந்துள்ளது.

அவர் விஐபிக்கள் அமரும் இடத்தில் அத்துமீறி நுழைந்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி