ஆப்நகரம்

வெற்றிக் குஷியில் மோடியை சந்தித்த ஜெகன் மோகன்; அவர் வைத்த முக்கிய கோரிக்கை இதுதான்!

ஆந்திர மாநிலத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜெகன் மோகன், டெல்லியில் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

Samayam Tamil 26 May 2019, 2:53 pm
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. 175 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்திற்கு, 151 உறுப்பினர்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.
Samayam Tamil Jagan Mohan


ஆளுங்கட்சியாக இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை வெறும் 23 உறுப்பினர்களை மட்டும் பெறச் செய்து, ஜெகன் மோகன் ரெட்டி வீழ்த்தியுள்ளார். இதேபோல் மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 22ஐ ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது.

எஞ்சிய 3 தொகுதிகளை தெலுங்கு தேசம் வென்றது. வரும் 30ஆம் தேதி, ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் டெல்லி சென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தலைவர் மோடியை ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்தார்.

அப்போது, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த சந்திப்பிற்கு பின் பேசிய அவர், எங்களது சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கை தொடரும்.

தனிப்பட்ட முறையில் மோடியிடம் தெரிவித்து இருக்கிறேன். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறினார்.

அடுத்த செய்தி