ஆப்நகரம்

ஜாகிர் நாயக் பேசிய சிடிக்கள் ஆய்வு செய்யப்படுகிறது: ராஜ்நாத் சிங்

''ஜாகிர் நாயக் பேச்சில் இருந்து முக்கிய குறிப்புகளை எடுத்துள்ளோம். இதுகுறித்து தேவையான நடவடிகைகள் எடுக்கப்படும்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 8 Jul 2016, 11:45 am
''ஜாகிர் நாயக் பேச்சில் இருந்து முக்கிய குறிப்புகளை எடுத்துள்ளோம். இதுகுறித்து தேவையான நடவடிகைகள் எடுக்கப்படும்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil cds are being examined whatever is justified will be done home minister rajnath singh
ஜாகிர் நாயக் பேசிய சிடிக்கள் ஆய்வு செய்யப்படுகிறது: ராஜ்நாத் சிங்


இதுகுறித்து இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ''ஜாகிரின் பேச்சு குறித்த சிடிக்கள், ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுக்கப்படும். உரிய நீதி வழங்கப்படும். மத்திய அரசைப் பொறுத்த வரை தீவிரவாதத்தில் எந்த வகையிலும் பரஸ்பரம் செய்து கொள்ளமாட்டோம்'' என்று தெரிவித்தார்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு ஊக்குவித்ததாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து அவரது பேச்சை ஆய்வு செய்யுமாறு, இந்தியாவிடம் வங்கதேச அரசு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஜாகிர் நாயக் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கலந்து கொண்டு, அவரை புகழ்ந்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

அடுத்த செய்தி