ஆப்நகரம்

துருக்கியில் ரயில் தடம்புரண்டு விபத்து; 10 பேர் பலி - 73 பேர் படுகாயம்!

வடமேற்கு மாகாணம் ஒன்றில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Jul 2018, 5:00 am
டெகிர்டாக்: வடமேற்கு மாகாணம் ஒன்றில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Turkey Accident


இதனை உறுதிப்படுத்திய துருக்கி சுகாதாரத் துறை அமைச்சகம், ரயிலானது எடிர்னேவில் இருந்து இஸ்தான்புல் நோக்கி சென்று கொண்டிருந்தது. சரிலார் கிராமம் அருகே சென்ற போது, ரயிலின் 5 பெட்டிகள் திடீரென தடம்புரண்டன.

அப்போது 362 பயணிகள், 6 ரயில்வே ஊழியர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 73 பேர் படுகாயமடைந்தனர். 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

மேலும் ஏர் ஆம்புலன்களும் அனுப்பப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளரும் மற்றும் ஆலோசகருமான இப்ராஹிம் காலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக மீட்கப்பட்டு, தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் டெகிர்டாக் ஆளுநர் மெஹ்மத் சிலான் கூறுகையில், அப்பகுதியில் பலத்த மழை காரணமாக விபத்து நேர்ந்ததாக தெரிவித்தார்.

10 died in train derailment in Turkey.

அடுத்த செய்தி