ஆப்நகரம்

சிறையை அடித்து நொறுக்கி தப்பியோடிய 900 கைதிகள்; தீவிரவாதிகள் பயங்கரம்...!

சிறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 900 கைதிகள் தப்பியோடி உள்ளனர்.

TNN 12 Jun 2017, 2:31 am
கின்ஷாசா: சிறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 900 கைதிகள் தப்பியோடி உள்ளனர்.
Samayam Tamil 11 dead over 900 prisoners escape in congo prison attack
சிறையை அடித்து நொறுக்கி தப்பியோடிய 900 கைதிகள்; தீவிரவாதிகள் பயங்கரம்...!


மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. அங்கு ஆளும் அரசுக்கும், தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையே தொடர் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் பென்னி சிறை மீது தீவிரவாதக் குழுக்கள் திடீர் தாக்குதல் நடத்தின. அப்போது பயங்கர ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு, சுமார் 900 கைதிகள் தப்பியோடிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தப்பியோடிய கைதிகளை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

11 dead, over 900 prisoners escape in Congo prison attack.

அடுத்த செய்தி