ஆப்நகரம்

உலகின் மிகப்பெரிய நரபலி கண்டுபிடிப்பு

தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளனர்.

Samayam Tamil 29 Apr 2018, 6:15 am
லிமா: தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்துள்ளனர்.
Samayam Tamil 140-children-found-at-peru


தென் அமெரிக்க நாடான பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்து உள்ள கடலோரப் பகுதியில் ஏராளமான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அவை நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள் என்றும் 5-14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிந்துள்ளது. 550 ஆண்டுகளுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

முற்கால சிமு பேரரசின் ஆட்சியில் இந்த மாபெரும் படுகொலை நடந்திருக்க வேண்டும் என்றும் கணிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இத்தனை பேர் நரபலி கொடுக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி