ஆப்நகரம்

ஈரான், ஈராக் நிலநடுக்கத்தில் 145பேர் பலி.!

ஈரான் ஈராக் எல்லைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கத்தில் 135 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

TNN 13 Nov 2017, 10:56 am
ஈரான் ஈராக் எல்லைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கத்தில் 145 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
Samayam Tamil 145 people were died in iran iraq earthquake
ஈரான், ஈராக் நிலநடுக்கத்தில் 145பேர் பலி.!


ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில், ஈரான் பகுதிக்குட்பட்ட கெர்மன்ஷா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக இரு நாடுகளிலும் எல்லைப்பகுதிகள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர். அப்போது சில கட்டிடங்களும் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்ததால் ஏராளமானோர், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த நில நடுக்கத்தினால் இரு நாடுகளிலும் சுமார் 145 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கெர்மன்ஷா மாகாணத்தில் மட்டும் 120-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் முழுவீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி