ஆப்நகரம்

டோரான்டோவில் இந்திய ஓட்டலில் வெடிவிபத்து: 15 பேர் காயம்!!

கனடாவில், டோரான்டோ அருகே உள்ள இந்திய ஓட்டல் ஒன்றில் இன்று சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் வெடித்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

Samayam Tamil 25 May 2018, 11:58 am
கனடாவில், டோரான்டோ அருகே உள்ள இந்திய ஓட்டல் ஒன்றில் இன்று சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் வெடித்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
Samayam Tamil டோரான்டோவில் இந்திய ஓட்டலில் வெடிவிபத்து
டோரான்டோவில் இந்திய ஓட்டலில் வெடிவிபத்து: 15 பேர் காயம்!!


டோரான்டோ நகருக்கு அருகே ஒன்டாரியோவில் உள்ளது மிஸ்சிஸ்சாகா. இங்குள்ள ஷாப்பிங் மாலில் பாம்பே பெல் என்ற பெயரில் இந்திய ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்கச் செய்து அங்கிருந்து தப்பி ஓடினர் என்று குலோப் அண்ட் மெயில் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வெடி குண்டு சம்பவத்தில் காயம் அடைந்த மூன்று பேர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 12 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிரடியாக ஓட்டலுக்குள் நுழைந்த இருவரும் தங்களது முகங்களை மூடியவாறு வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் இவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வெடி குண்டு சம்பவம் நடக்கும்போது ஓட்டலுக்குள் எவ்வளவு பேர் இருந்தார்கள் என்பது தெரியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர எண்களை டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி