உக்ரைன் நாட்டில் முதியோர் இல்லம் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி, 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்நாட்டின் தலைநகர் கீவ் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 35 பேர் தங்கியிருந்த அங்கு, திடீரென பற்றிய தீ, கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
இதையடுத்து, அவசர சேவை மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதியவர்கள் 16 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் விளாதிமீர் குரோஸ்மேன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் தலைநகர் கீவ் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 35 பேர் தங்கியிருந்த அங்கு, திடீரென பற்றிய தீ, கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
இதையடுத்து, அவசர சேவை மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதியவர்கள் 16 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் விளாதிமீர் குரோஸ்மேன் வருத்தம் தெரிவித்துள்ளார்.