ஆப்நகரம்

பள்ளத்தில் தலைகீழாக பேருந்து கவிழ்ந்து பயங்கரம்: 19 பேர் பரிதாப பலி

மியான்மரில் பேருந்து ஒன்று பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.

TNN 29 Apr 2017, 1:15 pm
யாங்கூன்: மியான்மரில் பேருந்து ஒன்று பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.
Samayam Tamil 19 killed as myanmar bus plunges into gorge
பள்ளத்தில் தலைகீழாக பேருந்து கவிழ்ந்து பயங்கரம்: 19 பேர் பரிதாப பலி


மியான்மர் நாட்டின் பாகோ மாகாணத்தில் இருந்து தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள மியாவாடி நோக்கி புறப்பட்டது. மியாவாடி அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அருகிலிருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. அந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அதில் 7 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் சரியில்லாத சாலைகளால் விபத்துக்கள் அரங்கேறுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக சாலைப் போக்குவரத்து மேம்பாட்டிற்காக ஆளும் அரசு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் மிக மோசமான சாலைகள் கொண்ட நாடுகளில் மியான்மர் 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nineteen people were killed and 21 injured after their bus toppled into a ravine in eastern Myanmar, police said today.

அடுத்த செய்தி