ஆப்நகரம்

நேபாள வெள்ளத்தில் பலியானவா்களில் 19 போ் மாணவா்கள்

நேபாள நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவா்களில் 19 போ் மாணவா்கள் என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.

TOI Contributor 3 Sep 2017, 11:51 pm
நேபாள நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவா்களில் 19 போ் மாணவா்கள் என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.
Samayam Tamil 19 students died in nepal flood
நேபாள வெள்ளத்தில் பலியானவா்களில் 19 போ் மாணவா்கள்


நேபாளம் நாட்டில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக இந்த வெள்ளத்தில் சிக்கி பலர் உயிாிழந்தனர். சித்வான், மக்வான்பூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் கூறுகையில், “இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 500 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 19 மாணவர்கள் பலியாகி உள்ளனர். ஜாபா மற்றும் சுன்சாரி மாவட்டங்களில் ஏற்பட்ட சேதம் இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சப்தாரி மாவட்டத்தில் சுமார் 20 மில்லியன் ரூபாய் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதேபோல், இயற்கை பேரழிவால் தன்ஷுவா மாவட்டத்தில் உள்ள 26 பள்ளிகள் சேதமடைந்ததில் சுமார் 6.6 மில்லியன் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆண்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 150 போ் வரை உயிாிழந்துள்ள நிலையில் இதில் 19 போ் மாணவா்கள் என தொவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி