ஆப்நகரம்

இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 236பேர் உயிரிழப்பு.!

சோமாலியாவின் தலைநகர் மோகதீசுவில், நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 276ஆக உயர்ந்துள்ளது.

TNN 16 Oct 2017, 10:09 am
சோமாலியாவின் தலைநகர் மோகதீசுவில், நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 276ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil 236 people were died in somalia bomb blast attack
இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 236பேர் உயிரிழப்பு.!


கிழக்கு ஆசிய நாடான சோமாலியாவின் தலைநகர் மோகதீசுவில், நேற்று முன்தினம் இரவு நடந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நட்த்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த பகுதியில், நேற்று முன்தினம் இரவு, திடீரென ஒரு டிரக் புகுந்தது. அதிலிருந்த சக்திவாய்ந்தகுண்டு வெடித்ததில், அங்கிருந்த ஒரு ஓட்டல் உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன.



குண்டு வெடிப்பினால் அங்குள்ள பகுதிகளில் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில், மற்றொரு குண்டும் வெடித்தது.

இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை, தற்போது 276ஆக உயர்ந்துள்ளது. மேலும் 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

236 people were died in somaliya bomb blast attack.

அடுத்த செய்தி