ஆப்நகரம்

தமிழகத்திலிருந்து சொந்த ஊர் திரும்பிய இலங்கை தமிழ் அகதிகள்

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களிலிருந்து 25 இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்பினர். இதில் 15 பெண்களும் 10 ஆண்களுமாக மொத்தம் 8 குடும்பங்களை சேர்ந்த 25 பேர் உள்ளனர். இவர்கள் மதுரையிலிருந்து மிஹின் லங்கா விமானம் மூலம் கொழும்பினை அடைந்தனர்.

TNN 26 Oct 2016, 9:02 am
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களிலிருந்து 25 இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்பினர். இதில் 15 பெண்களும் 10 ஆண்களுமாக மொத்தம் 8 குடும்பங்களை சேர்ந்த 25 பேர் உள்ளனர். இவர்கள் மதுரையிலிருந்து மிஹின் லங்கா விமானம் மூலம் கொழும்பினை அடைந்தனர்.
Samayam Tamil 25 srilankan refugees back to their home town from tamilnadu camps
தமிழகத்திலிருந்து சொந்த ஊர் திரும்பிய இலங்கை தமிழ் அகதிகள்


இலங்கை மீள்குடியேற்ற அமைச்சக குறிப்புகள் படி, தற்போது நாடு திரும்ப உள்ளவர்கள் வவுனியா, மன்னார், திருகோணமலை, மாத்தளை, கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கான பயணச் செலவுகளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்(UNHCR) ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் மீள் ஒருங்கிணைப்பு தொகையாக ஒரு நபருக்கு ரூ.5000ம், பயணப்படியாக ஒரு நபருக்கு ரூ.1200ம், உதவித்தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.5000ம் ஐக்கிய நாடுகள் ஆணையம் சார்பாக வழங்கப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 1,874 குடும்பங்களைச் சேர்ந்த 5,140 தமிழ் அகதிகள் தமிழக முகாம்களிலிருந்து இலங்கைக்கு திரும்பினர். மேலும் தமிழகத்திலுள்ள 110 அகதி முகாம்களில் 60,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர்.

25 srilankan refugees back to their home town from Tamilnadu camps.

அடுத்த செய்தி