ஆப்நகரம்

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி ஹபீஸ் சயீத் விடுவிப்பு

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த 2008ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி ஹபீஸ் சயீத் விடுவிக்கப்பட்டுள்ளார்.

TNN 22 Nov 2017, 5:19 pm
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த 2008ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி ஹபீஸ் சயீத் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil 11 mumbai attack mastermind hafiz saeed to be released from house arrest
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி ஹபீஸ் சயீத் விடுவிப்பு


மும்பை 2008ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு மூளையாக செயல்பட்டவர் ஜமாத் அத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி பின்புலமாக விளங்கிவர். உலக நாடுகளில் வற்புறுத்தலால் ஹபீஸ் சயீத் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஜனவரி 30, 2017 முதல் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானின் லாகூரில் இருந்த அவரது வீட்டுக்காவல் இம்மாத இறுதியில் முடிகிறது. இதனால், அவரை உடனே விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹபீஸ் சயீத்தின் வீட்டுக்காவலை 3 மாதங்கள் நீட்டிக்க பாகிஸ்தான் அரசு கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மேலும், வேறு வழக்குகளில் ஹபீஸ் சயீத்திடம் விசாரணை செய்ய தேவையில்லை எனில் உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் விரைவில் பாகிஸ்தானின் அரசு அவரை வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்க வாய்ப்புள்ளது.

கடந்த மாதம் ஹபீஸ் சயீத் வீட்டுக்காவலை பாகிஸ்தான் நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு நீட்டித்தது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி